பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Tuesday 1 October 2013


      எனது நண்பர் புதுக்கோட்டை மவுண்ட்சீயோன் பதின்மப் பள்ளியில்   பணிபுரிகிறார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க  அவரின் மாணவர்களுக்கு  அமைத்துக் கொடுத்த கவியரங்கம்.



பள்ளிக்குப் பெயர் வைப்போம்  !
குறுங் கவிஞர்களின் குறும் கவியரங்கம்.
                                       ஆன்றோர் அவைக்கு வணக்கம் !
            என் பள்ளிக்கு எப்படிப் பெயர் வைத்திருப்பார்கள் என்று
                                      என் குறுமூளை குறுகுறுத்ததன் விளைவே
                                      இக் குறுங் கவியரங்கம் !
                                      வாருங்கள் கவிச்சரம் தொடுக்கக் காத்திருக்கும்
                                      வருங்கால வைரமுத்துக்களை வரவேற்போம் !

கவியரங்கம் தொடங்குகிறது ,..

வாருங்கள்
பள்ளிக்குப் பெயர் வைப்போம் !

இருநூற்றுப் பதினாறில்
இவ்வெழுத்திற்குப் பெருமையுண்டு !
அவ்வெழுத்து கவிதை சொல்கிறது கேளுங்கள் !

வணக்கம் !
நான் “.
முதலில் நிற்கிறேன் !
முதன்மைப் பள்ளியின்
பொன்னெழுத்துப் பெயரின்
முதன்மை எழுத்தாய்
முன் நிற்கும்
வரம் தந்த வேர்களை வணங்குகிறேன் !
நான்

உன்னதப் பள்ளிக்குப் பெயர் வைக்க
இரண்டாம் எழுத்து தேடுகையில்
இயல்பாய் முன் வந்தது  இவ்வெழுத்து !
இனி கவிதையைக் கேளுங்களேன் !

நான்வு
உண்மைக் கல்வி தரும்
வுயர் பள்ளிக்கு
எழுத்தானதில் எனக்கு
எல்லையற்ற மகிழ்ச்சி!
இமயத்தில்  எங்கிருந்தாலும்
உயர்வு தானே !
ஆம் !
இரண்டாவதாய் நின்றாலும்
நான் இமயம் தான் !
நான்வு

நீளழகு எழுத்தொன்று
நாவழகுக் கவிதை சொல்ல
நடந்து வருகிறது !
வாருங்கள் கவிதையை வரவேற்போம் !

நான்ண்
மூன்றாவதாய் நிற்பவன் !
முழுநிலவாய் அழகொளிரும்
முத்துப்பள்ளிக்கு
முகப்பில் தோன்றுவதால்
நான் நீளழகு எழுத்து தான் !
நான்ண்

எளிமையழுகு எழுத்தொன்று
எழில் கவிதை படிக்க
ஆவலாய் வருகிறது !
கவிதையை வரவேற்போம் !

நான்ட்
சிலுவைக் குறியின் சிறுபாகமாய்
இருந்ததாலோ  இச் சிறியனை
இனிமைப் பள்ளிக்கு
தேர்ந்தெடுத்திருப்பார்கள் !
இறைவனுக்கு நன்றி !
நான்ட்

வண்மையழகொளிர
வரும் எழுத்து
நம் சிறப்பெழுத்துக்
கவிதையை செவிமடுப்போம் வாருங்கள் !

நான் சீ
நாணத்தின் நளினம்
எனக்குண்டு !
ஆனாலும் நாணலின் வளைவும்
எனக்குண்டு !
சீருயர்ந்த பள்ளியின்
சாதனைப் பெயரிலே
எனக்கும் சிற்றிடம்
கொடுத்தது..
இச்சிறியேனுக்குப் பேறு !
நான்சீ



நமக்கடித்தது யோகம் !
ஆம் .
இடையழகொளிரும்
இன்னிசை எழுத்தினை
பெற்றதனால்
நம் பள்ளி யோகம் தான் !

நான்யோ
யோகம் எனக்குத் தான் .
வையகத் தலைமை கொண்ட
வானளாவிய பள்ளிக்கு
என் உடம்பை இணைத்தமைக்காய்
யோகம் எனக்குத்தான் !
நான்யோ

முற்றுப்புள்ளிக்கு முன்னால்
முற்றத்தின் அழகியல்பாய்
ஈற்றெழுத்து வருகிறது
இறுதியாய் தன்னைச் சொல்ல !

நான்ன்
தமிழெழுத்தின் கடைசி..
தகைமை சால்
தொன்பள்ளிக்கும் கடைசி..
இறைவனை வழிபடும் போது
முன் நிற்கும் சுண்டு விரலாய்..
மனமகிழ்ந்து நிற்கின்றேன் ..
என்றென்றும் நிலைத்து நிற்கும்
பெரும் பேறு தந்திட்ட
பெரியோரை வணங்குகிறேன் !
நான்ன்



ஏழெழுத்து வந்தன..
ஏற்ற கருத்து தந்தன..

ஏற்றமிகு பள்ளிக்கு
ஏற்ற எழுத்து என்றன..
ஆம் ..
என்றும் உயர்ந்து நிற்கட்டும்
எம் பள்ளி ..
நாங்கள் ..
மவுண்ட் சீயோன்  .