பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday 26 December 2015

கைதி எண் 4958


கைதி எண் 4958



            மதுரை மத்திய சிறைச் சாலையில் பல 
ஆண்டுகள் அனைவருக்கும் பழக்கப்பட்ட எண் 
 தான் கைதி எண் 4958. பல உண்ணாநிலை அறப் 
போராட்டங்களையும், கைதிகளின் 

உரிமைக்காகவும் சமரசமற்றுப்  போராடிய 

எண் தான் இது

       கம்யூனிஸ்டுத் தலைவன் தியாகி பாலுவைத்
 தூக்கில் ஏற்றஅழைத்துச் சென்ற போது, பக்கத்து 
 அறையினின்றும் தோழர் பாலுவின் புகழ் வாழ்க,
கம்யூனிசத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது
என்று குரல் கொடுத்த எண் தான் இது.

           அன்றைய மதுரை சிறையில் கைதி எண்
4958 என்ற அறியபட்ட நமது தலைவர் தோழர்
இரா .நல்லகண்ணு அவர்களுக்குஇன்று  91 வது
 அகவை நன்னாள்  அரசியல்வாதிகள் என்றாலே 
ஒரு வெறுப்புணர்வுடன் பார்க்கப்படும் தமிழகத்தில்
தனது எளிமையால் அனைத்து தரப்பு மக்களாலும்
நேசிக்கப்படும் மூத்த தலைவர்
                    மரணத்தை வென்ற இந்த மாமனிதர்
1949 ஆம் ஆண்டு திருவேல்வேலி மாவட்டம் 
புலியூர் குறிச்சி என்ற கிராமத்தில் நள்ளிரவு
மணிக்குத் தூப்பாக்கிக் காவலர் பெரும் படையால் 
சுற்றி வளைக்கப்பட்டுக்  கைது செய்யப்பட்டார்
இவருக்குத் திருநெல்வேலி நீதிமன்றம் 
யுள் தண்டனையும், வெடிகுண்டு வைத்திருந்தார்
என்பதற்காக 6 ஆண்டுகளுமாக மொத்தம் 18 
ஆண்டுகள் தண்டனை வழங்கியது. மக்களின் 
எழுச்சி மிகுந்த போராட்டதால் பின்னர் விடுதலை
செய்யப்படடார். மொத்தம் 9 ஆண்டுகள் 
சிறையிலிருந்தார்.


நமது தோழருக்கு இனிய  அகவை நன்னாள் 
 வாழ்த்துக்கள்.

Friday 25 December 2015

வெண்மணி தியாகிகள் நினைவு தினம்


வெண்மணி தியாகிகள் நினைவு தினம் 




கீழ்வெண்மணிப் படுகொலைகள்:
                   கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 25 டிசம்பர் 1968இல் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால்  20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 தலித் வேளாண் கூலித் தொழிலாளர் படுகொலை நிகழ்வாகும்.

                   தஞ்சை என்றதும்  நமக்கு ராஜ ராஜ சோழனும், விவசாயமும், சிற்பங்களும், தான் நம் நினைவிற்கு வரும் ஆனால் அதையும் தாண்டி  சாதிய கட்டமைப்பின் பிடியில் சிக்குண்ட  இயல்பில்லாத இருப்பிடம்  என்பது கீழ்வெண்மணி நமக்கும் நினைவு படுத்திகொண்டே இருக்கிறது.

                தஞ்சையில் நிலச்சுவாந்தார்கள் தாழ்த்தபட்ட மக்களை பண்ணையாள் 
( அடிமை ) முறை கட்டமைப்பிலே பல நூறு ஆண்டுகளாக வைத்திருந்தார்கள்அவர்களின் குழந்தைகள் கல்வி கற்கும் உரிமையும் மறுக்கப்பட்டது, வேலை நேரத்தின் போது கடுமையான தண்டனைகள், இரத்தம் வரும் அளவிற்கு சாட்டையால் அடிப்பதும் மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து குடிக்கும்படி கட்டாயப்படுத்துவதும் மறுத்தால் அடிப்பதும். இத்தனை வலி அனுபவித்தும் 1968-வரை ஒரு படி நெல்லே கூலியாக வழ்ங்கப்பட்டு வந்தது. 

                   கம்யூனிஸ்ட் மணியம்மையும், சீனிவாசர் அவர்களும் பல்வேறு  விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் விவசாய தொழிலாளர்களை ஒன்றிணைத்து உழைப்புக்கு ஏற்ற கூலி ( இப்போது வாங்கும் ஒரு படி நெல்லுடன்  மேலும் ஒரு படி நெல் என்பது மட்டுமே  அவர்கள் கேட்ட கூலி உயர்வு) வேண்டும் என்ற கோரிக்கையை 1967 ல் முதல் முதலாக முன்வைத்தனர்.

                   இத்தனை நாட்கள் நம்மிடம் கூலி வேலை பார்த்த  அடிமைகள் கூலி அதிகமாக கேட்பதை அவர்கள் ஏற்கவில்லை…, இங்கு கூலி அதிகமாக கேட்பது என்பது பிரச்சனை இல்லை  கூலியாட்கள் எப்படி அதைக் கேட்கலாம் அவர்களுக்கு எப்படி இதைக் கேட்கும் துணிவு வந்தது  என்பதே பிரச்சனை….
,
                  இதனால் வெகுண்ட  நிலச்சுவாந்தார்கள் விவசாய சங்கம் இருப்பதால் தானே இந்த கூலியாட்கள் இத்தனை கேள்வி கேட்கிறார்கள் என்று நினைத்தனர் . எனவே சங்கத்தில் இருந்தவர்களை தாக்குவது , அவர்களுக்கு வேலை கொடுக்காமல் வெளியில் இருந்து கூலிக்கு ஆட்களை வரவழைப்பதுமாக தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை நிலச்சுவாந்தார்கள் உருவாக்கி கொண்டே இருந்தனர். 

                இந்த நிலையில் 25.12.1968 அன்று மாலை வெண்மணி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி, கணபதி என்ற இரண்டு  விவசாயிகளை சவரிராஜ் நாயுடு என்னும் நிலச்சுவாந்தார் வீட்டில் கட்டி வைத்து அடித்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை கேள்வி பட்ட கிராமத்து விவசாய  மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களைk  காப்பாற்றி மீட்டனர். 

                இதனை அறிந்த மற்ற நிலச்சுவாந்தார்கள் மற்றும் கோபால கிருஷ்ண நாயுடு, துப்பாக்கி ஏந்திய காவல்துறை, அடியாட்கள் என அனைவரும் ஒன்றினைந்து வெண்மணி கிராமத்தில் நுழைந்து கண்ணில் தென்பட்ட அனைத்து  மக்களையும் சுட ஆரம்பித்தனர் இதனால் தங்களைத் தற்காத்துக்  கொள்வதற்காக தொழிலாளர்கள் திருப்பித்  தாக்கியதில் பக்கிரி சாமி என்பவர் கொல்லப்பட்டார்..,துப்பாக்கி சூட்டையும், போலீஸ் மற்றும் அடியாட்களின் வெறியாட்டத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிகொள்வதற்காக தப்பித்து ஓட ஆரம்பித்தனர்.அப்போது கலவரம் நடந்த அந்த தெருவில் கடைசியாக இருந்தராமையாஎன்பவரின் குடிசைக்குள் பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என மொத்தம் 48 பேர் குடிசைக்குள் புகுந்தனர்.
ஆத்திரம் அடைந்த  வெறியர்கள் அந்த குடிசையினை பூட்டி தீ வைக்கும்படி அடியாட்களிடம் கட்டளை யிட்டார்கள் குடிசைக்கு தீ வைக்கப்பட்டது.., உள்ளே இருந்த குழ்ந்தைகள் முதியவர்கள் என அனைவரும் கதறினர்.. எப்படியாவது தப்பிக்கலாம் என்று வெளியே ஓடி வந்த ஆறு பேரில் இரண்டு பேர் வெளியே குடிசை எரிவதில் இருந்து யாரும் தப்பிக்க கூடாது என்று காவலுக்கு நின்ற அடியாட்களிடம் சிக்கி மீண்டும் எரியும் குடிசைக்குள் தூக்கி எறியப்பட்டனர்.

                உள்ளே நெருப்பில் வெந்து கொண்டிருந்த ஒரு தாய் தனது குழந்தையாவது காப்பாற்றபட வேண்டும் என்று தனது ஒரு வயது குழந்தையை வெளியே தூக்கி போட்டாள்.., வெளியே நின்ற அடியாட்களுக்கு அது குழ்ந்தையாக தெரியவில்லை அந்த ஒற்றை வயது சிறு குழ்ந்தையும் மீண்டும் எரிந்து கொண்டிருக்கும் குடிசைக்குள் தூக்கி எறியப்பட்டது. அந்த தீ வெகு நேரம் எரிந்து கொண்டே இருந்தது 1947 இந்தியாவிற்கு சுகந்திரம் கிடைத்து விட்டது என்ற அப்பட்டமான பொய் 1967 டிசம்பர் 25 கீழ்வெண்மணியில் 44 தலித்துகள் எரித்து கொல்லப்படும் அந்த தீயில் கருகி சாம்பலாக காற்றில் பரவி க் கொண்டிருந்தது.

                சம்பவம் இரவு 8 மணிக்கு கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு போலிஸார் இரவு 12 மணிக்கே மிக விரைவாக வந்து விட்டனர். மறுநாள் காலை 10 மணிக்கே , எரிந்து சாம்பலாகி போயிருந்த அந்த குடிசையின் கதவு திறக்கப்பட்டது.


                  மொத்தம் 44 உயிர்கள் அல்லது 44 சடலத்தின் சாம்பல் எந்த அடையாளமும் கண்டுபிடிக்க முடியாதபடி சாம்பலாக கிடந்தது. அதில் ஒரு தாய் தன் குழ்ந்தை கருகி விட கூடாது என்று இறுகி அணைத்தபடி கருகி பிணமாக கிடந்தாள். இன்னொரு குழ்ந்தை தன் தாயின் முலையில் வாய் வைத்தடியே இறந்து கிடந்த காட்சியை எந்த ஒரு காரணத்தாலும் நியாயப்படுத்தவே முடியாது.