பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Friday 25 March 2016

வெப்பப்பொழுது !



வெப்பப்பொழுது ! 





வசப்படாத பொழுதுகளை
வசப்படுத்தும் முனைப்பில்
வறண்ட பொழுதுகள் .



ஆதவன் மிரட்டலில்
வெப்பத் தகிப்புகளில்
வறண்ட வாசங்கள்.


கண்மாய்ப் பொட்டலின்
வெடித்த பாளங்களில்
வேரூன்ற முயலும்
கருவேல வேராய்ப்
பயனற்ற பொழுதுகள்
.


கவிதையின் கருத்தேடிய
களைத்தலிலும்
களிமண் ஈரந்தேடிய
சலித்தலிலும்
வறண்ட பொழுதுகளின்
வசங்கள் நீளும் !



நூலாம்படை படிந்த
பள்ளிக்கூடக் கதவுகளில்
சார்த்திவைக்கப்பட்டுள்ளன…
ஏர்கலப்பைகள் !



கயிற்றுக்கட்டிலில் சுகமாய்ப்
படுத்துறங்குகின்றன..
சோம்பலும் உழைப்பும்.



கிராமத்து ஆலமரங்களில்
கோடைக்காலமென்பது
வறண்ட பொழுதுகளாகவே
நகர்கின்றன.



பொழுதுகளின் குளிர்தலுக்காய்
வரிசைகட்டி நிற்கின்றன..
மண்ணும் மனதும்.