பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Friday 27 December 2013


                                   தமிழகத் தமிழாசிரியர் கழகம்,
                                புதுக்கோட்டை மாவட்டக் கிளை.
               

                                  தமிழ்ப் பயிற்சித் தேர்வுகள் -2014.

மதிப்பிற்குரியீர்,
                       
                   வணக்கம். தமிழாசிரியர்களின் உரிமைகளை வென்றெடுக்கத்

தொடர்ந்து கல்வித் தளத்தில் இயங்கி வரும் நமது கழகம் மாணவர்களின்

நலனுக்காகவும் பல நற்பணிகளைச் செய்து வருவது தாங்கள் அறிந்ததே.

அதன்படி இவ்வாண்டு தமிழ்ப் பயிற்சித் தேர்வுகள் நடக்க உள்ளன. கடந்த

காலங்களில் தங்களின் முழு உதவியினால் மட்டுமே பயிற்சித் தேர்வுகள்

செம்மையாகவும்  மிக வெற்றிகரமாகவும் நடந்தேறியது. அதனைப் போலவே

இவ்வாண்டும் பயிற்சித் தேர்வுகளை நடத்தி  மாணவர்களின் கற்றல்

இலக்கான நன்மதிப்பெண்களையும் முழுத் தேர்ச்சியினையும் அடைவதற்கு

தலைமையாசிரியப் பெருமக்கள், தமிழாசிரியச் சான்றோர்கள், வட்டப்

பொறுப்பாளர்கள் , மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து உதவிட அன்புடன்

கேட்டுக்கொள்கிறோம். நன்றி.


                                                             முதல் தாள் :  06.01.2014

                                                        இரண்டாம் தாள்  : 07.01.2014



  புலவர்.கு.ம.திருப்பதி,                                                           சி.குருநாதசுந்தரம்        
 மாவட்டத்தலைவர்                                                               மாவட்டச் செயலர்,


வி.சந்தான ஆரோக்கியநாதன்,                                       க.இளங்கோவடிவேல்,
மாவட்டப்பொருளர்,                                                        மாவட்ட இணைச்செயலர்,


முனைவர்.சு,துரைக்குமரன்,                                     முனைவர். இளங்கோவன்
தேர்வுச் செயலர் (புதுகை )                                  தேர்வுச் செயலர் ( அறந்தாங்கி)
                                             

Thursday 26 December 2013

தன்இயல்பு !


 காலை வணக்கங்களினூடே
வரவழைக்கப்பட்ட குறுஞ்சிரிப்பு !


செயல்களின் வேர்களில்
சாயல் மறந்து போன
சிறுசிறு வேர்முண்டுகள் !


வழக்கமான நிகழ்வுகளிலோ
வற்றிப்போன தன்முனைப்பு !


பின்பற்றுவதை பாதையாக்கிவிட்ட
நிகழ்வுகளின் பெருந்தடங்கள் !


சுயம் களவாடப்பட்ட
சிறைக் கடமைகள் !


சிதைந்துபோன அல்லது
சிதைக்கப்பட்ட
நிழலின் உண்மைப்புள்ளிகள் !


இயல்பின் ஆனந்தம்நோக்கி
இதயம் காத்திருக்கிறது !


ஒருமுறையாவது தடங்கள்
இயல்பின் சாயலை
போர்த்திக்கொள்ளும் போதுதான்
சுயத்தின் முகம்
விரிந்து மலர்ந்து
உயரஉயரப் பறக்கும்.!


அதுவரை ..
தன்இயல்பின் காத்திருத்தல்..
தொடர்ந்து நீளும் !


மனம்பேசும் பின்கால
மகிழ்வுணர்வுகளுக்காய்..
ஒருநாள்
நீளல் குறுகும்,

ஏனெனில் காலத்தின்
செலவழிக்கப்படாத
என்நொடிகளில்
என் தன்வயப்படுத்தல்
தொடங்கிவிட்டது !

Tuesday 17 December 2013

மரணத்தின் துளி !



                                 நவம்பர் மாதத்தின் ஒரு பின்நாள். கடும் காய்ச்சல். அன்று காலையிலிருந்தே உடல் ஒத்துழைக்க மறுத்தது. களைப்பும் சலிப்புமான பொழுதுகளின் கனத்த நகர்தலில் பள்ளிக்குச் சென்றேன். அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு என்ற காரணத்தைத் தவிர நான் பள்ளுக்குச் சென்றதற்கு வேறு காரணம் கண்டறிய இயல்வில்லை. முதல் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு.
                        அன்று என்னால் வகுப்பில் கவனம் செலுத்த இயலவில்லை. மாணவச் செல்வங்கள் என் மனநிலையைப் புரிந்து கொண்டு என்னை வகுப்பை விட்டுத் துரத்தினார்கள். தலைமையாசிரியரிடம் நாணத்தையும் மீறி அனுமதி கேட்டேன். என்னை இரக்கத்துடன் பார்த்த அவர் மானசீகமாக அனுமதி அளித்தார். சக ஆசிரியத் தோழர்கள் என்னை வீடு வரை கொண்டுவந்து விடுவதாகச் சொன்ன வேண்டுகோளை ஏற்க மறுத்த அந்த நொடியிலிருந்து என் முள்பாதை தொடங்கியது.
                        களைப்புடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்த என் மனம் அமைதியற்று இருந்தது எனலாம். புதுக்கோட்டை மச்சுவாடிச் சாலையில் என் முன்னால் சென்ற நாயொன்றைக் காப்பாற்றும் பொருட்டு வண்டியைத் திருப்பிய எனக்கு அடுத்து நடந்தது நினைவில்லை. சாலையில் இரத்த வெள்ளத்தில் மிதந்தேன். வலது கால் முட்டியில் கடுமையான வலி. நாடி பெயர்ந்திருந்தது. ஆங்காங்கே இரத்தச் சிராய்ப்புகள்.
                       . பேசச் சக்தியற்று நடக்கச் சக்தியற்று விழுந்து கிடந்த என்னை ஒரு கை ஆதரவாகப் பற்ற்றியது. அன்புடன் பேசியது. என் செல்பேசியிலிருந்து என் மனைவிக்கும் ஆசிரியத் தோழர்களுக்கும் செய்தி அனுப்பியது.
                       என்னைக் காப்பாற்றிய அந்த மனிதரை நன்றி நவிலப் பார்த்தேன். என்னைக் கைத்தாங்கலாலாத் தூக்கி ஒரு மகிழுந்திலேற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அந்த மகானின் கரங்களைப் பிடித்துக் கொண்டு கதறி அழ வேண்டும் போல் இருந்த்து. சக மனிதன் துடித்துக்கொண்டிருக்கும் போது நேசமுடன் கை நீட்டும் இத்தகைய மனிதர்களால் தான் உலகம் இன்னும் உயிர்த்துக்கொண்டிருக்கிறது. அவரது பெயரைக் கேட்டேன். முகம்மது ஜமால் என்று கூறினார். என் இதயச் சுவர்களில் பாரதிக்கு அடுத்த படியாய் அவரைச் செதுக்கினேன். என் வாழ்வில் மறக்க முடியாத மாமனிதராய் அவர் இருந்தார்.
                    ஆசிரியத் தோழர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார்கள்.  தோழர் செந்திலும் அம்புரோஸும் என்னை ஆற்றுப்படுத்தினார்கள். என் உடைகளைச் சரி செய்தார்கள். புது உடையினை ஒடிப்போய் வாங்கி வந்தார்கள்.  என் மனைவியிடத்து ஆறுதல் கூறி உதவிகள் பல செய்தார்கள். தோழர் மகாசுந்தர், திருப்பதி. முத்து நிலவன் ஆகியோர் உடனடியாக மருத்துவர் சலீமைத் தொடர்பு கொண்டு அவசரச் சிகிச்சைக்கு உதவினார்கள். நிஜாம் ஓரியண்டல் உடற்கல்வி ஆசிரியத் தோழர் என்னைத் தூக்கி மருத்துவரிடம் காண்பிக்கச் சென்றதை நினைத்துப்
பார்க்கையில் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்து விட்டது. எத்தனை அன்பு. மனித நேயத்தின் நிழல் அங்கே நீண்டிருந்தது.
                      மருத்துவர் குத்தூஸ் என்னைச் சோதித்தார். ஒரு மாதம் விடுப்பு எடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தியவுடன் எனக்குத் தலை சுற்றியது. என் மாணவர்கள், என் தமிழாசிரியர் கழகம், என் குடும்ப்ப் பணிகள் எல்லாம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தன. அந்நேரத்தில் மருத்துவர் குத்தூஸும், மருத்துவர் சலீமும் என் முதன்மையான உணர்வுகளாகத் தெரிந்தார்கள். மரணத்தின் வலி என்னைப் படுக்கையில் வீழ்த்தியது. சொல்லொணா வலி என்னைச் சூழ்ந்து கொண்டதாய் உண்ர்ந்தேன்.
என் ஆசிரியப் பணியில் இருபத்தைந்து நாள் விடுப்பு எடுத்தது முதன்முறை என்றாலும் எதோ இனம் புரியாத அச்சமும் கோபமும் எரிச்சலும் என்னை ஆட்கொண்டன.
                     இதோ கொஞ்சம் கொஞ்சமாக நான் என் பழைய நிலைக்குத் திரும்பி வருகிறேன். வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த தருணங்களில் பராதியையும் சிலப்பதிகாரத்தினையும் தொல்காப்பியத்தினையும் முழுமையாகப் படித்தேன். முடக்கம் இனித்தது.
                என்னை மீள வைத்த ஆசிரியத் தோழர்களின் அன்பு வியப்பிலாழ்த்தியது. அவர்களின் மனித நேயத்தை வணங்கித் தொழுகிறேன்.
என் மீள்தலில் மகிழ்வு கொண்டு அக அன்பு ஒழுக என்னை அரவணைத்த என் பள்ளி ஆசிரியத் தோழர்களுக்கும், தமிழகத் தமிழாசிரியர் கழக புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் என் நிலை கண்டு கண்ணீர் துளிர்த்து எனக்காக இறைவனைத் தொழுத என் மாணவச் செல்வங்களுக்கும் என்னை ஆற்றுப்படுத்திய என் ஆருயிர் அனைத்து ஆசிரியத் தோழமைகளுக்கும் என்னை முழு உடற்தகுதியடையச் செய்வதற்காய் அல்லும் பகலும் அயராது உழைத்துப் பாடுபட்ட என் அன்பு மனைவிக்கும் என்றென்றும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். சாலை விபத்து என்பது ஒரு மனிதனின் வாழ்வை எவ்வாறு புரட்டிப் போட்டுவிடும் என்பதற்கு என் அனுபவமே முன்நிற்கும் எச்சரிக்கைப் பாதை. இப்பொழுதெல்லாம் அந்த மச்சுவாடிச் சம்பவமே அடிக்கடி என்முன்னால் அச்சமேற்படுத்துகிறது. கவனமாக வண்டியில் செல்லுங்கள். ஏனென்றால் நம் கடமைகள் நம் முன்னே வெற்றிடமாக்கப் பட்டுவிடும்.

Tuesday 1 October 2013


      எனது நண்பர் புதுக்கோட்டை மவுண்ட்சீயோன் பதின்மப் பள்ளியில்   பணிபுரிகிறார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க  அவரின் மாணவர்களுக்கு  அமைத்துக் கொடுத்த கவியரங்கம்.



பள்ளிக்குப் பெயர் வைப்போம்  !
குறுங் கவிஞர்களின் குறும் கவியரங்கம்.
                                       ஆன்றோர் அவைக்கு வணக்கம் !
            என் பள்ளிக்கு எப்படிப் பெயர் வைத்திருப்பார்கள் என்று
                                      என் குறுமூளை குறுகுறுத்ததன் விளைவே
                                      இக் குறுங் கவியரங்கம் !
                                      வாருங்கள் கவிச்சரம் தொடுக்கக் காத்திருக்கும்
                                      வருங்கால வைரமுத்துக்களை வரவேற்போம் !

கவியரங்கம் தொடங்குகிறது ,..

வாருங்கள்
பள்ளிக்குப் பெயர் வைப்போம் !

இருநூற்றுப் பதினாறில்
இவ்வெழுத்திற்குப் பெருமையுண்டு !
அவ்வெழுத்து கவிதை சொல்கிறது கேளுங்கள் !

வணக்கம் !
நான் “.
முதலில் நிற்கிறேன் !
முதன்மைப் பள்ளியின்
பொன்னெழுத்துப் பெயரின்
முதன்மை எழுத்தாய்
முன் நிற்கும்
வரம் தந்த வேர்களை வணங்குகிறேன் !
நான்

உன்னதப் பள்ளிக்குப் பெயர் வைக்க
இரண்டாம் எழுத்து தேடுகையில்
இயல்பாய் முன் வந்தது  இவ்வெழுத்து !
இனி கவிதையைக் கேளுங்களேன் !

நான்வு
உண்மைக் கல்வி தரும்
வுயர் பள்ளிக்கு
எழுத்தானதில் எனக்கு
எல்லையற்ற மகிழ்ச்சி!
இமயத்தில்  எங்கிருந்தாலும்
உயர்வு தானே !
ஆம் !
இரண்டாவதாய் நின்றாலும்
நான் இமயம் தான் !
நான்வு

நீளழகு எழுத்தொன்று
நாவழகுக் கவிதை சொல்ல
நடந்து வருகிறது !
வாருங்கள் கவிதையை வரவேற்போம் !

நான்ண்
மூன்றாவதாய் நிற்பவன் !
முழுநிலவாய் அழகொளிரும்
முத்துப்பள்ளிக்கு
முகப்பில் தோன்றுவதால்
நான் நீளழகு எழுத்து தான் !
நான்ண்

எளிமையழுகு எழுத்தொன்று
எழில் கவிதை படிக்க
ஆவலாய் வருகிறது !
கவிதையை வரவேற்போம் !

நான்ட்
சிலுவைக் குறியின் சிறுபாகமாய்
இருந்ததாலோ  இச் சிறியனை
இனிமைப் பள்ளிக்கு
தேர்ந்தெடுத்திருப்பார்கள் !
இறைவனுக்கு நன்றி !
நான்ட்

வண்மையழகொளிர
வரும் எழுத்து
நம் சிறப்பெழுத்துக்
கவிதையை செவிமடுப்போம் வாருங்கள் !

நான் சீ
நாணத்தின் நளினம்
எனக்குண்டு !
ஆனாலும் நாணலின் வளைவும்
எனக்குண்டு !
சீருயர்ந்த பள்ளியின்
சாதனைப் பெயரிலே
எனக்கும் சிற்றிடம்
கொடுத்தது..
இச்சிறியேனுக்குப் பேறு !
நான்சீ



நமக்கடித்தது யோகம் !
ஆம் .
இடையழகொளிரும்
இன்னிசை எழுத்தினை
பெற்றதனால்
நம் பள்ளி யோகம் தான் !

நான்யோ
யோகம் எனக்குத் தான் .
வையகத் தலைமை கொண்ட
வானளாவிய பள்ளிக்கு
என் உடம்பை இணைத்தமைக்காய்
யோகம் எனக்குத்தான் !
நான்யோ

முற்றுப்புள்ளிக்கு முன்னால்
முற்றத்தின் அழகியல்பாய்
ஈற்றெழுத்து வருகிறது
இறுதியாய் தன்னைச் சொல்ல !

நான்ன்
தமிழெழுத்தின் கடைசி..
தகைமை சால்
தொன்பள்ளிக்கும் கடைசி..
இறைவனை வழிபடும் போது
முன் நிற்கும் சுண்டு விரலாய்..
மனமகிழ்ந்து நிற்கின்றேன் ..
என்றென்றும் நிலைத்து நிற்கும்
பெரும் பேறு தந்திட்ட
பெரியோரை வணங்குகிறேன் !
நான்ன்



ஏழெழுத்து வந்தன..
ஏற்ற கருத்து தந்தன..

ஏற்றமிகு பள்ளிக்கு
ஏற்ற எழுத்து என்றன..
ஆம் ..
என்றும் உயர்ந்து நிற்கட்டும்
எம் பள்ளி ..
நாங்கள் ..
மவுண்ட் சீயோன்  .                                                                  

Sunday 11 August 2013

வணக்கம் !

ஒன்பதாம் வகுப்பில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழாசிரிய நண்பர்களுக்கு வளரறி மதிப்பீடு செயல்பாடுகள் வடிவமைப்பதில் பல ஐயப்பாடுகள் ஏற்பட்டுள்ளதை அவர்களின் அலைபேசித் தொடர்பின் மூலம் அறிந்தேன்..எனவே அதனைப் போக்கும் வாயிலாக என் வகுப்பறையில் செயல்படுத்தப்பட்ட முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் சார்ந்த வளரறி மதிப்பீடு (அ) செயல்பாடுகளை இந்த இடுகையில் பதிவு செய்துள்ளேன். பயன் பெற்று அதன் பின்னூட்டத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள். தமிழாசிரியர் கழகத்தின் மாவட்டத் தேர்தல் வரும் 25.08.2013 அன்று நடைபெற உள்ளது. சிறப்பாகச் செயல்படும்  தமிழாசிரியர்களைத் தேர்வு செய்து நம் மாவட்டத்தில் சீரிய தமிழ்ப்பணியாற்றிட உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி. மற்றொரு இடுகையில் சந்திப்போம்.
                                                           அன்புடன்,

                                                      சி.குருநாதசுந்தரம். 

மதிப்பீட்டுக்கூறுகள்

1
தன் முயற்சி
2
உச்சரிப்புப் பிழையறிதல்
3
உச்சரிப்புப்பிழையின்றிக்கூறல்
4
எழுத்துக்களின் ஒலி அறிதல்
5
ஒலி வேறுபாடு உணர்தல்
1
கவனமாகக் கேட்டல்
2
முழுமையாகக் கேட்டல்
3
மையக்கருத்தினைக் கூறல்
4
தானே கூற முயலல்
5
நேர மேலாண்மை
1
செய்யுளில் வரிசையுணர்தல்
2
சொற்களின் பொருளுணர்தல்
3
வரிசைப்படுத்தல்
4
சொற்றொடராக அமைத்தல்
5
தன்முயற்சி
1
ஆர்வம், முயற்சி
2
கருத்துமுறை மாறாமை
3
மெய்ப்பாடு
4
தொடக்கம் முடிவு
5
தயக்கமின்றிப் பேசுதல்
1
புரிதல்
2
எழுத்தின் சரியான உச்சரிப்பு
3
ஆயத்தம்
4
தன் முயற்சி
5
தற்சார்பு.
























மேற்காண் செயல்பாடுகளின் மதிப்பீட்டுக் கூறுகளைக் கொடுத்துள்ளேன்.
1 முதல் 5 முடிய, முதல் செயல்பாட்டிற்குரிய மதிப்பீட்டுக் கூறுகள். அடுத்தது
இரண்டாவது செயல்பாடிற்குரியது.தொடர்ந்து பார்த்துக்கொள்ளவும்
                                                             ( நாளை முழுமையாக இடுகிறேன் )