பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday 5 July 2014

குகனே குகன் !

                    பத்தாம் வகுப்பு  கம்பராமாயணம் பற்றிய வகுப்பு மிகவும் ஆழமாக அமைந்தது. தேடிச் சேர்த்த செய்திகளை மாணாக்கரிடம் கொண்டு சென்று நிமிர்கையில் கடைசி இருக்கை பரமேஸ்வரி எழுந்து கூறினாள்.
குகனே குகன் ! 
                   என் நிமிர்தல் மதிப்பிற்குரியதாக மாறியதாக உணர்ந்தேன்.  

நிமிர்தலின் புரிதலை உங்களுடனும் பகிர்கிறேன்.

                                                                         
                        குகனது அறிமுகம்
1953.
ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு
நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான்,
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்,
காயும் வில்லினன், கல் திரள் தோளினான்.
             ஆய காலையின் - அந் நேரத்தில்; ஆயிரம் அம்பிக்கு நாயகன்- ஆயிரம்நாவாய்களுக்குத் தலைவனும் தூய கங்கைத் துறை விடும் தொன்மையான் - தூய்மையான கங்கைத் கரையில் நெடுங்காலமாகப் படகு விடும் தன்மை  உடையவனும்; காயும் வில்லினன் -பகைவரைச் சீறி அழிக்கும் வில்லுடையவனும் கல் திரள் தோளினாள் - மலை போல் திரண்ட தோளை உடையவனும் ஆகிய; போர் - போர்த் தொழிலில் வல்ல;
குகன் எனும்நாமத்தான் - குகன் என்ற பெயரை உடையவன் .


1954.
துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த பேர் -
அடியன், அல செறிந்தன்ன நிறத்தினான்,
நெடிய தானை நெருங்கலின், நீர் முகில்
இடியினோடு எழுந்தாலன்ன ஈட்டினான்.

(குகன் ) துடியன் - துடி என்னும் பறை உடையவன் நாயினன் -
வேட்டைநாய்களை உடையவன் தோற் செருப்பு ஆர்த்த பேர்
அடியன் - தோலாற் செய்த மிதியடிஇறுக்கிய பெரிய பாதங்களை
உடையவன் அல் செற்நிதன்ன நிறத்தினான் - இருள்நெருங்கித்
திரண்டால் ஒத்த கருநிறம் உடையவன் நெடிய தானை நெருங்கலின் -
தன்னுடையமிகப்பெரிய சேனை நெருங்கி் வருதலின்; நீர் முகில் -
பெய்யும் மேகம் இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான் -
இடியோடு கூடி மேற் கிளம்பினாற் போன்ற தன்மைகொண்டவன்.

1961.சிறுங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்

         மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன்,

         ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன்,-

          இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான்.
 
     

சிருங்கி பேரம் என - சிருங்கி பேரம் எனப் பெயர் பெற்றுதிரைக்

கங்கையின் - அலை வீசும் கங்கை யாற்றின்மருங்கு தோன்றும் நகர்-

பக்கத்தில் தோன்றுகின்ற நகரிலே; உறை வாழ்க்கையன் - தங்கி வாழ்கின்ற

வாழ்க்கையை உடையவன் ஆகிய அவன்இருந்த வள்ளலை - (முனிவர்

தவச்சாலையில்)தங்கியிருந்த இராமபிரானைகாண - காண்பதற்கு

ஒருங்கு தேனொடு மீன்உபகாரத்தன்- ஒரு சேரத் தேனும் மீனும் என்ற


கையுறைப் பொருளை ஏந்தியவனாய்; வந்துஎய்தினான்-வந்து சேர்ந்தான்       
       
1963.கூவாமுன்னம், இளையோன் குறுகி, ‘நீ

          ஆவான் யார்?’ என, அன்பின் இறைஞ்சினான்;

         ‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;

           நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்என்றான்.  
   
     கூவா முன்னம் - குகன் அழைப்பதற்கு முன்னமே இளையோன்
குறுகி - 
இலக்குவன் அவனைச் சென்றடைந்துநீ ஆவான் யார்என -
நீ யார்? என்று வினாவஅன்பின் இறைஞ்சினான் - அன்போடு குகன்
அந்த இலக்குவனை வணங்கினான்;  (முன் அறியாதவன் ஆதலின்
அவனையே இராமனாகக் கருதி) தேவா! - அரசனாகிய தெய்வமே!நாய்
அடியேன் -
 நாய் போலக் கீழான அடிமையாகிய; நாவாய் வேட்டுவன் -
கங்கையைக்கடக்க ஓடங்களை உடைய வேட்டுவச் சாதியினனாகிய
குகனாவேன் நின் கழல்சேவிக்க வந்தனன்- உனது திருவடிகளை
வணங்கும் பொருட்டு வந்தேன்;’ என்றான்    

                                   நாளை மீண்டும் அடுத்த பாடல்களோடு இணைகிறேன்.

நன்றி : கம்பராமாயணம்- சென்னைப்பல்கலைக்கழகப் பதிப்பு. -

4 comments:

  1. ஆகா அருமையான பாடம் குகனே குகன்..
    இன்னும் ஆவலுடன் ஐயா..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தம்பி. தொடர்ந்து தொடர்பிலிருங்கள்.

      Delete
  2. பாடல்களும், உரையும் அருமை. நன்றி.
    www.ponnibuddha.blogspot.in
    www.drbjambulingam.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா !

      Delete