பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Wednesday 23 January 2013

தேசிய வாக்காளர் தினம் – சனவரி 25


வாக்குரிமை.


பதினெட்டு வயதினிலே வாக்குரிமை பெற்றோம்
பெற்றிட்ட வாக்குரிமை பேணிடத்தான் கற்போம்
புதியதொரு உலகமதை படைத்திடவே வந்தோம்
பெருமைதரும் வாக்குரிமை பயன்படவே செய்வோம்.

நம்முரிமை வாக்குரிமை நாமதனை உணர்வோம்
நல்லுரிமை வாக்குரிமை பெற்றுநாமும் உயர்வோம்
தம்முரிமை பயன்படுத்தத் தலையாய நிற்போம்
நம்நாடு உயர்ந்திடவே நாளெல்லாம் நினைப்போம்.

விலைகொடுத்து வாங்குகின்ற வாக்குகளை ஒழிப்போம்
நிலையுயரும் நம்முரிமை தடுப்போரை அழிப்போம்
தலையாயக் கடமையென நம்வாக்கு அளிப்போம்
நிலையுயர்த்தும் தலைமைபெற எந்நாளும் முயல்வோம்.

மக்களாட்சி உயர்ந்திடவே வாக்குரிமை வளர்ப்போம்
தக்கநிலை வந்தவுடன் வாக்குரிமை பெறுவோம்
திக்கெட்டும் பயணித்து விழிப்புணர்வை அளிப்போம்
பக்கத்து நாடெல்லாம் போற்றிடவே வாழ்வோம்.

வாக்குகளின் மதிப்பினையே மக்களுக்குச் சொல்வோம்
தேக்குமர உறுதிபோன்று வாக்குவன்மை பெறுவோம்
நோக்குகின்ற இடமெல்லாம் வாக்குரிமை பகர்வோம்
பூக்கின்ற மலரெல்லாம் நமதென்று நுகர்வோம்.

No comments:

Post a Comment