பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday 13 January 2013

தைமகளே வா !




உழவும் தொழிலும் உயிரெனக் கொண்ட
அழகுத் திருமகளே வா !

தமிழின் தலைமை தரணிக்குத் தந்திட
தகைமைத் தலைமகளே வா !

உண்மை உழைப்பு உறுதியாய் ஊன்றிட
வண்மை வளமகளே வா !

பெருநில மெங்கும் பெருந்தமிழ் பேச
பெருநிலப் பூமகளே வா !

வறுமை நீக்கி பசிப்பிணி போக்கிட
பொதுமைப் பெருமகளே வா !

பெண்மை மதிக்கும் மதியொளி பரப்ப
திண்மைச் சுடர்மகளே வா !

மாண்புடை மாந்தர் புவியினில் தோன்ற
காண்நிகர் கலைமகளே வா !

புன்னகை வித்து வேராய் விழுதூன்ற
பொன்முக நன்மகளே வா !

எங்கும் எதிலும் மகிழும் மகிழ்வாய்
பொங்கும் வளர்மகளே வா !

ஏங்கிடும் நீர்சூழ் நிலமகள் நெற்படையைத்
தாங்கிடும் தைமகளே வா !  

2 comments:

  1. Replies
    1. நன்றி கோபிநாத்.தங்களின் வலைப்பூ எப்போது வரும் ?

      Delete