பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Wednesday 13 February 2013

உதடுகளின் முகம்


எனக்கு ஒரு
நண்பன் உண்டு.

பருத்த வயிறு,
படியவாரிய தலை,
துணிந்த நடை,
தேடல் கண்கள்.

நாணயங்கள்
சிதறிய ஒலியாய்,
கலகலத்த மனம்,
கைகுலுக்கும் நேயம்.

விழி வலிக்காத
கோபம்.
வளையும் குணம்.

வார்த்தை வரிசை
மாறாத நேர்ப்பேச்சு.
வளமான நெற்றியில்
வசதியாய் அமர்ந்த
முடிக்கீற்று.

எல்லாம் என்னுள்
விமர்சிக்கப்படுவதுண்டு.

 ஆனால்
வெள்ளை இதழ்களின்
பின்புலத்தில் விரியும்
வெடிச்சிரிப்பு மட்டும்
என்னால்
அழகியலாக்கப்படும்.

நகையுணர்வு பரப்பும்
உதடுகளின் முகம்
உயிர்க்கும் அழகன்றோ ?

No comments:

Post a Comment