பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Wednesday 13 February 2013

நானும் பேனாவும்


என்னைத்
தெரியப்படுத்தும் தூதுவன்.

மனிதர்களைப் போல
இதனுள்ளும்
பல வடிவங்கள்.

மனதை வருடும்
மன்மத எழுத்துகளை
என் பேனா ..
உருவாக்கும் வேளைகளில்
நான்
உங்களை வருடுகிறேன்.

என்
நாக்கு வறண்டிருந்தாலும்
என்
பேனாவின் நாக்கு மட்டும்
என்றுமே வறண்டதில்லை.

என்
பேனாவிற்கு மட்டும்
சுகமும் சுமையும்
சிரிப்பும் சோகமும்
சமமான நிகழ்வுகள்.

என்
ஆசிரியம் மெருகேறும்
அழகான தருணங்களில்
என் பேனாவை
வலியின்றி முத்தமிடுகிறேன்.

என்
மாணவனின் முதல்பரிசும்
என் பேனாவால்
மாணவனோடு கொண்டாடப்படும்.

என்
சட்டைப் பொத்தான்களைச்
சரிசெய்யும் நேரத்தைவிட
என் பேனாக்கூர்மையைச்
சரிசெய்யும் நேரம்
என்னுள் எப்போதும்
நீண்டுகொண்டேயிருக்கிறது

No comments:

Post a Comment