மின்னல் தீண்டிய
பார்வையின் சுகம்.
கருவிழிக் காந்தத்தில்
கனவுகளின் உயிர்ப்பு.
மேகக்கூந்தலின் சாரலில்
உணர்வின் விதை.
பிறைப் புருவத்தில்
விண்மீன் ஒளிர்ப்பு.
வளமான நெற்றியில்
வெண்ணருவிக் கீற்று.
கூர்மூக்கின் வாசலில்
பன்மலர் வாசம்.
ஓவியச் செவிமடலில்
ஊஞ்சலாடும் காதணிகள்.
கன்னக் குழிகளிலோ
அழகின் புதையல்.
இதழ்களின் அசைவினில்
இன்கவிதை உயிர்.
உணர்வுகளின் புன்னகை
உணர்ந்த நொடிகளுக்குக்..
காதலெனப் பெயரிட்டபோது..
குதூகலித்துத் துள்ளியது..
மனமும் என்னுலகமும்.
No comments:
Post a Comment