பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Tuesday 18 December 2012

நானும், நீங்களும் !


நான் ஓர்
ஆசு இரியன்..

உறுதிபடுத்தப்பட்ட கனவை
உண்மையாக்கும் மனிதநயம்.
கரும்பலகைச் சுண்ணாம்பில்
காய்த்துப்போன என்
கை விரல்களுக்கு உண்டு.


கருவளையக் கண்களில்
காத்திருக்கும் தேடல்,
மனிதவிதை விதைக்கப்படும்
வாழ்வுநிலம் தீர்மானிக்கும்.


அங்கீகரிக்கப்படும் அடுத்தநொடியின்
புதியதைச் சொல்லும்.


புவியை மேம்படுத்தும்
புனிதம் சொல்லும்.


ஆழமாய் ஊடுருவி
அனைத்தையும் தொட்டுவிட்ட
நேற்றைய விழுதுகளின்
உண்மை வேர்.. நான்.


அனுபவ வீச்சில்
அக்கரை தொட்டவனை
அங்கீகரியுங்கள்..!


ஏனெனில்
நீங்கள் உருவானதில்
நானும் ஒருவன்.


No comments:

Post a Comment