பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday 23 December 2012

நானும் கரும்பலகையும்..!


கற்றலை நேசமாக்கிய
கருப்புச் செவ்வகம்.


என் எழுத்துகள்
இதில்
பதிவு செய்யப்படும்பொழுதெல்லாம்
நான்..
மாணவன் மனங்களில்
பதிவு செய்யப்படுகிறேன்.


என்
நாட்களின் நகர்தலை
நீண்டு இயக்கும்.
நிலைத்த இயக்குநராகவே
நானிதனை நேசிக்கிறேன்.


என்
கனவுக் கவிதையை…
காவிய நடிப்பை
களமாக்கும் மைதானம்
இதுவாகத் தானிருக்கிறது..!


இங்கு செய்யப்படும்
சாதாரணத், தவறுகள்
சரிசெய்ய இயலாத
சரித்திரத்தை உருவாக்கிவிடும்.

என்
களைத்த எண்ணங்களை
கலைத்துக் கற்றலாக்கியதும்
வினாக்களை வீணாக்காமல்
விரிந்த விடைகளாக்கியதும்
இந்தக்
கருப்புப் பெட்டகம்தான்..!


என்
வகுப்பை விரல்பிடித்து
நடத்திச் செல்லும்
இவ்வகுப்பறைத் தோழனோடு
நானும் நடக்கிறேன்…
நல்ல தோழமையோடு…! 

No comments:

Post a Comment