பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Friday 21 December 2012

நானும் வகுப்பறையும் !


வாழ்க்கைக் களத்தின்
வாழும் களம்
வகுப்பறைவாசம் மட்டும்தான்..!


தேசம் நிமிர்வதற்காய்..
குனிதல் இங்கே
குற்றமாய்ப் பேணப்படுவதில்லை.


தாவலும் துள்ளலும்
துளிர்தலும் தெளிதலும்
துளியும் மீறப்படுவதில்லை.


காலம் கையாளப்படுவதை
கரும்பலகை கற்றுக்கொடுக்க..
சுண்ணாம்பு எழுத்துகளோ
சாதனையுணர்வைத் தூண்டும்..!


நிகழ்வைப் பக்குவப்படுத்தும்
நினைவுகளைச் சுமந்து
வகுப்பறைச் சுவர்கள்
வேர்பிடிக்கக் கற்றுத்தரும்..


வசவும் கிறுக்கல்களும்
வெட்கமும் காதலும்
பரந்தசூழலை பரவசப்படுத்தும்..!


புதியமனிதனின் பழையபக்கங்களை
எண்ணக் கல்வெட்டுக்களாய்
புதுமைத்துள்ளலோடு நெறிப்படுத்தும்,
வானுயர்ந்த வகுப்பறைவாசல்..!


திரும்பிப் பார்க்கும்
எந்த மனிதனுக்கும்
உண்மையாய்த் தெரிவது..
உணர்ந்த வகுப்பறையின்
உயர்ந்த அனுபவம்
மட்டும் தான் ..!


No comments:

Post a Comment